நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா இன்று நடைபெற்றது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் அழகு ராஜன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை மரகதவல்லி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நைனா முகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்