நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஆழ்வார்குறிச்சியில் செயல் பட்டு வந்த ஸ்டார் மகளீர் குழுவில் பிரச்சனை ஏற்பட்டு அதன் தலைவி பணத்தை பிரித்து கொடுக்காமல் மோசடி செய்தார். இதையடுத்து குழு உறுப்பினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சனிடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட எஸ் பி பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தார்.