பாளை பேருந்து நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை செல்லும் சாலையில் முருகன் குறிச்சி பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வண்ணாரப்பேட்டை நெல்லை சந்திப்பு டவுன் போன்ற பகுதிகளுக்கு செல்ல பேருந்து ஏறுகின்றனர். ஆனால் அங்கு பேருந்து நிழற்குடை இல்லாததால் மக்கள் வெயிலில் நிற்க வேண்டிய நிலை இருக்கிறது. எனவே பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.