பெங்களூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று நெல்லை ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்தபோது ரயில்வே போலீசார் ரயிலில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் வெளிமாநில மது பாட்டில்கள், குட்காவை முன் பதிவில்லா பெட்டியில் 3 பேர் கடத்தி வந்தது தெரிந்தது. விசாரணைக்குப் பின் செல்வராஜ், சச்சின், முத்துராமன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் மது பாட்டில்கள், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.