நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் ஒரு வழி பாதையில் அரசு பேருந்துகள் அத்துமீறி செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லையிலிருந்து அம்பை வரை புறவழிச்சாலையில் சாலை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதில் சேரன்மகாதேவி பகுதியில் ரயில்வே கேட் இருந்த இடத்தில் புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அந்தப் பாதையில் ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதையும் மீறி அரசு பேருந்துகள் அத்து மீறி ஒருவழி பாதையில் செல்கின்றன.