நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே பட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்
ஸ்டாலின். நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டின் மேல் பகுதியில் வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 30, 000 திருட்டு போனதை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.