திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசம் திருக்கோயில் சார்பாக அய்யா கோயில் முதல் அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோயில் வரை உள்ள தாமிரபரணி ஆற்றில் இன்று (மார்ச் 14) சுமார் 110 கிலோ துணிகள் ஏலதார் மூலம் எடுக்கப்பட்டது. மேலும் திருக்கோயில் கல்மண்டபத்தில் உள்ள துணிகள் மற்றும் தென்பகுதியில் உள்ள படித்துறையில் உள்ள துணிகளும் அகற்றப்பட்டது.