பாகிஸ்தானில் 52 தமிழ்நாட்டு மாணவர்கள் உள்ளனர் என்று அமைச்சர் நாசர் கூறியுள்ளார். "நமது மாநிலத்தை சேர்ந்த அந்த மாணவர்களை பத்திரமாக மீட்டு வரும் நடவடிக்கைகளை முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் எடுத்துள்ளோம். அவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்" என்றார். தற்போது வான்வழி மற்றும் தரைவழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை அழைத்து வருவது குறித்து ஆலோசனை நடக்கிறது.