தேனி மாவட்டம் போடி பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் (36) என்பவர், நீண்ட காலமாக குடி பழக்கத்தில் இருந்து வந்தார். இதனால், அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குடி பழக்கத்தை நிறுத்த முடியாத மன வேதனையால் இருந்த நிலையில், ஜூன் 5 அன்று தனது வீட்டில் வெங்கடேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.