தேனியை சேர்ந்த முருகன் அரசுப் பேருந்து நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு தேவி (50) என்ற சகோதரி உள்ளார். முருகனுக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அந்த நேரத்தில் அவரது சகோதரி தேவி முருகனின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை சுருட்டியுள்ளார். இதையடுத்து அவர் மீது முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.