தேனி மாவட்டம், போடி ஒட்டக்கூத்தர் தெருவை சேர்ந்தவர் சிவபாண்டியன் (25 வயது). தனியார் நிறுவன ஊழியர் இவர் சம்பவ தினத்தன்று தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனது அலுவலகத்திற்கு முன்பு டூவீலரை நிறுத்திவிட்டு சென்றார்.
பணி முடிந்து திரும்பி வந்து பார்த்தபோழுது டூவீலர் திருடு போயிருந்தது. அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் டூவீலர் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த சிவபாண்டியன் தேனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தேனி நகர் போலீசார், டூவீலர் திருடர்களை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.