வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேர் தேரோட்டம்

82பார்த்தது
வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தேர் தேரோட்டம்
தேனி மாவட்டம், வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித்சிங், பாரம்பரிய உடை அணிந்து திருத்தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தேனி மாவட்டத்தில் முக்கிய திருவிழாவாக ஆண்டுதோறும் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைப்பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழா 06.05.2025 அன்று தொடங்கப்பட்டு 13.05.2025 வரை நடைபெற்று வருகிறது. மேலும், 13.05.2025 வரை நடைபெறவுள்ள இத்திருவிழாவில், பக்தர்கள் அம்மனை தரிசித்துவிட்டுச் செல்லும் வரை பாதுகாப்பு பணியில் ஆண், பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி