தேனி மாவட்டம், போடி அருகே மல்லிங்காபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன். இவரது மனைவி வசந்தி (39 வயது). குடும்பத் தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழும் நிலையில், சௌந்தரபாண்டியன் அடிக்கடி மனைவி வீட்டுக்குச் சென்று தகராறு செய்து வந்தார். நேற்று மனைவியின் வீட்டுக்குச் சென்ற சௌந்தரபாண்டியன், அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் சௌந்தரபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.