தேனி: மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது

53பார்த்தது
தேனி: மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது
தேனி மாவட்டம், அல்லிநகரம் குள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லலிதா (60) இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் பார்சல் வந்துள்ளதாக கூறி வாலிபர் ஒருவர் வீட்டிற்கு வந்து தண்ணீர் கேட்டுள்ளார். 

தண்ணீர் எடுத்து வர மூதாட்டி வீட்டுக்குள் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் லலிதாவின் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு, அவரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சென்றார். 

இது குறித்து லலிதா அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட காளியப்பன் (25) என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி