பெரியகுளம் மக்கள் நலச் சங்கம் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சமூக சேவை ஆற்றியவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கும் நிகழ்வு இன்று (டிச. 28) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இரத்த தானம், உணவு தானம், தாய்ப்பால் தானம் செய்வதில் சிறந்து விளங்கிய பசியில்லா பெரியகுளம் அமைப்பை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. இந்த கேடயத்தை அமைப்பின் நிறுவனர் பௌஜுதீன் மற்றும் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.