பெரியகுளம் அருகே அரசு மதுபான கடையை மூட தமிழ் புலிகள் போராட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டி பிரதான சாலையில் புதிதாக அரசு மதுபான கடை திறக்கப்பட்டது. அதனை மூட வலியுறுத்தி தமிழ்புலிகள் கட்சியின், திராவிட விடுதலை கழகம், பெண்கள் விடுதலைக் கழகம் இணைந்து அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக முழுவதும் பூரண மது விலக்கு அமல்படுத்துவோம் என திமுக அரசு சொன்னது என்னாச்சு எனக்கூறி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்