தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பகுதியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பட்டியல் எழுத்தர் தமிழ்ச்செல்வன், உதவியாளர் திவாகர், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், செங்குவார்பட்டி, ஜி கல்லுப்பட்டி, கோட்டைப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த நெல் மணிகளை விற்பனை செய்யலாம் என நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். கெங்குவார்பட்டி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.