ஆண்டிபட்டி அருகே நாய் குறுக்கே வந்ததால் டீ கடைக்குள் புகுந்த ஆம்னி கார்
பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆம்னி காரில், விசேஷத்திற்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பியபோது, ஆண்டிபட்டி பகுதியில் நாய் குறுக்கே வந்ததால் எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த வணிக வளாக கட்டிடத்தின் பாதுகாப்பு கம்பியை உடைத்து டீக்கடைக்குள் கார் புகுந்தது.
இதில் காரில் பயணித்த 4 பேரில் ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்