தேனியில் பித்தளை எழுத்துக்களை திருடியவர் கைது

70பார்த்தது
தேனியில் பித்தளை எழுத்துக்களை திருடியவர் கைது
தேனி கர்னல் ஜான் பென்னிகுக் பேருந்து நிலைய வளாகத்தில் திறப்பு விழா பலகையில் பித்தளையால் ஆன எழுத்துக்கள் பதிக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் பித்தளை எழுத்துக்கள் ஒவ்வொன்றாக மாயமாகி வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் நகராட்சி பணியாளர்களை கண்காணிக்குமாறு தெரிவித்தார். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று, நகராட்சி பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தேனி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பித்தளை எழுத்துக்களை திருடிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் கையும் களவுமாக பிடித்து தேனி போலீசாரிடம் ஒப்படைத்தனர். நகராட்சி மேலாளர் முருகன் புகாரின் பேரில் பித்தளை எழுத்துக்களை திருடிய கார்த்திக் (40 வயது) என்பவரை தேனி நகர் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி