தேனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பு ஆய்வாளர் போத்திராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ தினத்தன்று குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோசனப்பட்டி பகுதியில், மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த ரோசனப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த செல்வம் (49 வயது) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.