தேனி மாவட்டம், ஜெயமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அ. ரங்கநாதபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, சம்பவ தினத்தன்று ஜெயமங்கலம் போலீசார் தோட்டத்து வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த அ. ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த பெருமாள் (55 வயது) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 24 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.