தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ஏ. பி. நந்தகுமார் தலைமயிலான குழு உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வீரபாண்டி பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய நியாய விலைக் கடையை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய உணவுப் பொருட்களின் தரம் குறித்தும், நியாய விலை கடை செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் உள்ளிட்ட துரை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.