அனுமன் ஜெயந்தி முன்னிட்டு பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் காலை முதல் பெரியகுளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவிலுக்கு நேரில் சென்று சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தார்.