கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளிவிழா கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ. மகாராஜன் (ஆண்டிபட்டி). கே. எஸ். சரவணக்குமார் (பெரியகுளம்) ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.