பெரியகுளம் பால்குடம், காவடி எடுத்து வழிபட்ட பக்தர்கள்
தேனி மாவட்டம் பெரியகுளம் பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் இன்று பக்தர்கள் காவடி தூக்கியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்து பகவதி அம்மனை வழிபட்டனர். இன்று இரவுடன் முக்கிய திருவிழா நிறைவு பெற உள்ள நிலையில் கோவில் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்