தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், நேரில் சென்று பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களான சத்துமாவு மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உடனிருந்தனர்.