உடல் நலம் குன்றி ஆதரவற்று கிடந்த முதியவர்
சிகிச்சைக்கு அனுப்பிய சமூக ஆர்வலர்
போடி, ஜூன் 10- போடி மூணார் செல்லும் வழியில் கட்டபொம்மன் சிலை அருகே ஆதரவற்ற நிலையில் 67 வயது மதிக்கத்தக்க காளிதாஸ் என்ற முதியவர் உடல் நலம் குன்றி கிடந்தார்.
ம. சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித் குமார் பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு, குளிக்க வைத்து சுத்தம் செய்து 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மூலமாக போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வு அப்பகுதியில் மிகவும் பாராட்டை பெற்றுள்ளது.