தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் ஒருவரின் இறப்பு நிகழ்விற்கு இவரது மனைவி மற்றும் ஒருசிலருடன் நேற்று முன் தினம் பாண்டியன் என்பவரது ஆட்டோவில் சென்றுள்ளனர். சுருளிப்பட்டி ரோட்டில் ஆட்டோவை அதிவேகமாக இயக்கிய நிலையில் ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.