தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் காவல் நிலையம் எதிரே தேரடி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை சின்னமனூர் நகராட்சி நிர்வாகம் சார்பாக ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணி மேற்கொண்டனர். இந்தப் பணியின் போது நகராட்சியின் ஆணையாளர் கோபிநாத் மற்றும் நகராட்சி நகர அமைப்பு அலுவலர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்போடு அகற்றப்பட்டது. இதில் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்