கம்பம் அருகே தனியார் தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு மீட்பு
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயண தேவன்பட்டியை சேர்ந்தவர் சுருளி என்ற விவசாயி இவரின் தோட்டத்தில் சுமார் 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று வந்தது இதைக் கண்டு அதிர்ந்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த கம்பம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராஜலட்சுமி தலைமையிலான தீயணைப்பு துறையினர் அப்பகுதியை சேர்ந்த பணக்காளை என்ற சமூக ஆர்வலர் உதவியுடன் பாம்பை பிடித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.