தமிழக கேரள எல்லை குமுளி அருகே அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையை பராமரிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பழைய கண்காணிப்பு குழு கலைக்கப்பட்டு தற்போது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டது.
இந்தக் குழு அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக முல்லைப்பெரியாறு அணையின் நிலை குறித்து நாளை (மார். 22) ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதனைத் தொடர்ந்து குமுளி அருகே அமைந்துள்ள முல்லைப்பெரியாறு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஆலோசனைகள் நடத்த உள்ளனர்.