சின்னமனூர் அருகே மைக் செட் உரிமையாளர்கள் இசைப்போட்டி

59பார்த்தது
சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒலிபெருக்கியாளர்கள் சார்பில் 11ஆம் ஆண்டு இசைப்போட்டி திருவிழாவை நடத்தினார்கள்.

 எரசக்கநாயக்கனூர் மலையடிவாரத்தில் உள்ள வலசைக்காடு பகுதியில் திறந்தவெளியில் நடந்த இந்தப் போட்டியில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மைக்செட் உரிமையாளர்கள் தங்களின் மைக்செட் உபகரணங்களுடன் வந்து கலந்துகொண்டனர். போட்டியில் ஒலிபெருக்கிக் குழாய்களை தூரத்தில் வரிசையாகக் கட்டிவைத்து, பழங்கால கிராமப் போன் மூலம் அந்த ஒலிபெருக்கிகளில் இருந்து துல்லியமாகவும் தெளிவாகவும் அதிக சத்தத்துடன் கூடிய பாடலை ஒலிபரப்பு செய்தனர். அதில் சிறந்த ஒலிபெருக்கியாக தெளிவாக வரும் பாடல் ஒலிகளை தேர்வு செய்தனர்

இந்த இசைப்போட்டியில் வெற்றிபெற்ற ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு ரொக்கத்தொகையை பரிசாக வழங்கினார்கள். மேலும் இந்தப் போட்டியின்போது மைக்செட் உரிமையாளர்கள் கூறுகையில், பொதுமக்கள் மத்தியில் மைக்செட் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வண்ணமாக நலவாரியம் அமைத்துதர வேண்டும். மேலும் கோவில் திருவிழாக்கள் மற்ற திருவிழாக்களில் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு அரசு அனுமதி தரவேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி