தேனி மாவட்டம் சின்னமனூரில் கிறிஸ்து பெருவாழ்வு இயக்கம் சார்பாக கிறிஸ்துமஸ் பெருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜெபக்கூட அதிபர் அருட்திரு ரத்தினம் பாஸ்டர் தலைமையில் ஜெப வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஜீவ ஊழியர் சுதா செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.