சின்னமனூர் அருகே கடையில் தகராறு செய்த 4 பேர் மீது வழக்குதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே கன்னிசேர்வைபட்டியை சேர்ந்தவர் முருகேசன் (60). இவர் டீக்கடை வைத்துள்ள நிலையில் இவரது கடையில் தினமும் இதே ஊரை சேர்ந்த ராஜ்குமார், பிரகாஷ், சன்ரைசி, பிரவீன் ஆகிய நால்வரும் வடை சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றுள்ளனர். முருகேசன் பணம் கேட்ட நிலையில் 4 பேரும் கடையின் முன் பட்டாசு வெடித்து தகராறு செய்துள்ளனர். சின்னமனூர் போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.