தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர் மழையின் காரணமாக, அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது, இதனால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில் தற்போது மழை அளவு குறைந்து தண்ணீர் நீர் வரத்து சீரானதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு வருகை புரிந்து உற்சாகத்துடன் குளித்துச் செல்கின்றனர்.