தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் வடபுதுப்பட்டி ஊராட்சி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைப்பதற்காக வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து அரசு அலுவலகங்கள் முன்பாக மரக்கன்றுகள் நட்டு வைத்தார். உடன் எம்எல்ஏ சரவணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி, உதவி பொறியாளர் அஜய் பலர் கலந்து கொண்டனர்.