சுதந்திர தின விழா விருதுகள் மாவட்ட ஆட்சியர் தகவல்

76பார்த்தது
சுதந்திர தின விழா விருதுகள் மாவட்ட ஆட்சியர் தகவல்
தமிழ்நாடு அரசின் சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை மூலம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினவிழா அன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகர்களுக்கு சுதந்திர தினவிழாவின் விருது பெற விண்ணப்பங்கள் வரவேறுகப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா. , இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்; அவர்கள் தெரிவித்ததாவது,
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2023 ஆம் ஆண்டில் 15. 08. 2023 சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்படவுள்ளது.
இவ்விருது பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும்,
18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம்
5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்;ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். இவ்விருது பெறுவதற்கு விண்ணப்பதாரரின் உயிர் தரவு, சுயசரிதை (ம) பாஸ்போர்ட் அளவுபுகைப்படம்-2 (Pயளளிழசவ ளுணைந Phழவழ), ஒரு பக்கம் தனியரைப் பற்றிய விபரம்
தமிழ் (ம) ஆங்கிலம் (தமிழில் -மருதம் எழுத்துருவில் (ம) ஆங்கிலம் - இருத்தல் வேண்டும். மேலும் தனியரால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கையேட்டில் தேசிய விருதுகளின் விபரம் , சான்றிதழ், சேவையை பாராட்டி வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தி தொகுப்பு, சமூக சேவையாளரின்ஃநிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விபரம், தனது இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று ஆகிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி உரிய முறையில் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேற்கண்ட தகுதிகளை உடையோர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக, மூன்றாம் தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் உரிய படிவத்தினை பெற்று 10. 06. 2023-க்குள்; விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா, இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி