உத்தமபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் துப்புரவு குடியிருப்பைச் சோ்ந்த மந்திரி மகன் கெளதம் (26) தனது இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணன் மகன் ராஜா (15), அழகா் மகன் மனோஜ் (16) ஆகியோருடன் உத்தமபாளையம் புதிய புறவழிச் சாலை வழியாக சின்னமனூருக்குச் சென்றாா். அப்போது, எதிரே கம்பம் நோக்கிச் சென்ற காா், இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த கெளதம் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த சிறுவா்கள் இருவரும் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து, உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா் ஓட்டுநா் சா்மாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.