தேவாரம் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டிவிட்டு அவர் தோட்டத்துக்கு சென்று விட்டு மீண்டும் மாலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு பீரோவின் உள்ளே வைக்கப்பட்டிருந்த 25 லட்சத்தை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.
இது குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிந்து பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.