தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் நேற்று புதிய கட்டடத்தின் சிலாப் இடிந்து விழுந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், தரமற்ற வேலை செய்த கான்ட்ராக்டரை கைது செய்ய வலியுறுத்தியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் நகரச் செயலாளர் அறிவழகன் தலைமையில் கம்பம் அரசு மருத்துவமனை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.