பெரியகுளம் சுதந்திர வீதி, மில்லர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடையில் இருந்து கூடுதலாக தண்ணீர் வருவதால் அடிக்கடி கழிவு நீர் சாலைகளில் செல்கிறது. சுதந்திர வீதி பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அங்கு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.