தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட சக்கம்பட்டியில் உள்ள திருவள்ளுவர் காலனி சமுதாய கூடத்தில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மனிதநேய அறக்கட்டளை, ஏபிடி அகாடமி இணைந்து, தேனி வைகை ஐ கேர் சார்பாக இந்த இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர். முகாமினை ஆண்டிபட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் சுமதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் செய்தனர்