ஆண்டிபட்டி: அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பண பலன்களை விரைந்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், தேர்தல் கால வாக்குறுதிகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றக்கோரியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி