தேனி முத்துசங்கிலிபட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவி தனுஸ்ரீ (16). இவர் உடல் பருமனாக, இருப்பதை நினைத்து வருந்தி நேற்று வீட்டில் தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பிறகு அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராஜதானி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.