தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பு ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் அன்னஞ்சி பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பதிவு எண் இல்லாத டூ வீலரில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி விற்பனை செய்த மேல்மங்கலம் பகுதி சேர்ந்த செல்வராஜ் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.