ஆண்டிபட்டி அருகே நடுக்கோட்டை ஏ. வாடிப்பட்டி செல்லும் சாலையில் பாசனக்கால்வாய் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தை தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். இந்நிலையில் பாலத்தில் இருபுறமும் அமைக்கப்பட்ட பாதுகாப்பு தடுப்புகள் சேதமடைந்துள்ளன. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. பாலத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.