தோசை சுட்டுத் தராத மனைவி வெட்டிக் கொலை

68459பார்த்தது
தோசை சுட்டுத் தராத மனைவி வெட்டிக் கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே என். மோட்டூர் மேட்டு கொட்டாயை சேர்ந்தவர் கணேசன் (60) கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாதம்மாள் (50). இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் கணேசன் தோசை சப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, கேஸ் சிலிண்டர் தீர்ந்ததால் இனி தோசை சுட்டுத் தர முடியாது என மனைவி கூறியதால் ஆத்திரம் அடைந்த கணேசன் அவரை, கத்தியால் வெட்டியுள்ளார். அப்போது தடுக்க வந்த மருமகள், குழந்தை ஆகியோரையும் வெட்டியதால் 3 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், மாதம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.