உத்தரப் பிரதேசத்தில் தனது கணவர் தினமும் குளிப்பதில்லை எனக்கூறி, திருமணமான 40 நாட்களில் அவரது மனைவி விவாகரத்து கோரியுள்ள சம்பவம் நடந்துள்ளது. அவரது உடலில் இருந்து வரும் துர்நாற்றம் தாங்க முடியவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். திருமணமான 40 நாட்களில் இதுவரை 2 முறை மட்டுமே தனது கணவர் குளித்துள்ளார் என மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த தம்பதியை மனநல ஆலோசனைக்கு செல்ல நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.