நாக்கை அறுத்து கடவுளுக்குப் படைத்த பயங்கரம்

73பார்த்தது
நாக்கை அறுத்து கடவுளுக்குப் படைத்த பயங்கரம்
33 வயது நபர் ஒருவர் தனது நாக்கை அறுத்து கடவுளுக்கு காணிக்கையாக செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்துள்ளது. அஞ்சோரா காவல்நிலையம் அளித்த தகவலின்படி, ராஜேஷ்வர் நிஷாத் என்ற நபர், கிராமக் குளத்துக்குச் சென்று, மந்திரங்களை உச்சரித்து, கத்தியால் நாக்கைத் தானே அறுத்துக் கொண்டார். அவர் ஏன் எதற்காக நாக்கை அறுத்துக்கொண்டார் என தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி