பாகிஸ்தானின் நரிப்படையால் சிங்கங்களை எதிர்த்துப் போராட முடியாது என பாகிஸ்தான் எம்.பி.ஷாகித் அகமத் ஆவேசமாக பேசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இம்ரான் கான் கட்சியின் எம்.பி.ஷாகித் அகமத், "நம் நாட்டு பிரதமர் ஒரு கோழை. இந்தியாவை எதிர்கொள்ள முடியாமல் பிரதமரும், ராணுவ தளபதியும் ஓடி ஒளிந்துள்ளனர்" என கடுமையாக விமர்சித்துள்ளார்.